இறை மந்திரம்

"மன் " என்றால் மனம்

"திரா" என்றால் விடுவித்தல்

மனதை இறைவனை நோக்கி மந்திரம் கூறி துதித்தால் , துன்பங்களில் இருந்து விடுபெறுவோம் என்று பொருள்.

வாழ்க்கையில் வெற்றி பெற அனுதினமும் கூற வேண்டிய மந்திரம்

ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!!
ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!!
மந்திரத்தின் பொருள் :

" ஓம்" என்ற சப்தம் அண்டத்தில் ஒலிக்கப்படும் சப்தமாகும், இதனை இன்றைய காலகட்டத்தில் மேல்நாட்டு விஞ்ஞானிகள் கூட ஒப்புக் கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
" நமசிவாய" என்ற நாமம் பஞ்ச பூதங்களின் சப்தம். இந்த பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பே இறைவன்.

ந - நிலம்
ம - நீர்
சி - அக்னி
வா - வாயு
ய - ஆகாயம்

திருமூலர் 'ஊனுடம்பு ஆலயம்' என்று சொல்கிறார். இறைவனை மனதால் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர் உடலே ஆலயம்.

"அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில்" என்பது பழமொழி.
அண்டம் என்றால் Universe. பிண்டம் என்றால் நமது உடல்.
ஒவ்வொரு முறை "ஓம் நமசிவாய வாழ்க வாழ்க " என்று தொடர்ச்சியாக சொல்ல சொல்ல பஞ்சபூதங்களின் ஆற்றல் உள்வாங்கப் பெற்று நம் உடல், மனம் அனைத்தும் மேன்மை அடைகிறது.

இதைத்தான் வள்ளலார்,

"நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை நான் மறவேன்"
என்று சொல்கிறார்.

ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!!

சத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம்
சத்து என்றால் ஜீவாத்மா
சித்து என்றால் ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்த நிலை


ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைவதால் கிடைக்கும் பேரானந்தமே சச்சிதானந்தம்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்ல சொல்ல நமக்கும் இந்த ஆனந்தம் கிடைக்கிறது.

ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!!

சற்குரு என்பவர் யார் ?

'சத்' என்றால் ஆத்மா. ஆத்மாவிற்கு குருவானவரே 'சற்குரு'.
இறைவன் வேறு சற்குரு வேறல்ல.
பூமியில் சகல வல்லவரே சற்குரு, மனித ரூபத்தில் இருக்கும் இறைவனே சற்குரு பகவான்.

ஸ்ரீ ராமர் , ஸ்ரீ கிருஷ்ணர் , புத்தர் , ஆதி சங்கரர் , ஸ்ரீ ராகவேந்திரர் , சீரடி சாய்பாபா, பகவான் ஞானவள்ளல், இன்று பகவான் ஸ்ரீ சற்குருநாதர் இவ்வாறாக அடுக்கடுக்காக சற்குருமார்கள் பூமியில் இருந்து கொண்டே இருப்பர்.

உணர்வே பிரம்மம்,
பிரம்மமே சற்குரு,
சற்குருவே கடவுள்!

இலட்சியத்தினுள் எல்லாம் சிறந்த இலட்சியம் பகவானை அடைய வேண்டும் என்பதும், அத்துடன் மற்ற ஜீவாத்மாக்களும் கடவுளை அடைய ஆற்றும் தொண்டேயாகும். இப்படிப்பட்ட இலட்சியமே ஒப்புயர்வற்றது.
இதுவே நமது இலட்சியம்!